திருப்பதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலை வர் ஜெகன் மோகன் ஆந்திர முதல்வராக இருந்த பொழுது, முறைகேடு வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபுவை சிறை யில் அடைத்தார். தற்பொழுது ஆந் திராவில் ஆட்சி மற்றம் அடைந்து, தெலுங்கு தேசம் - பாஜக - ஜன சேனா ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதல்வராக தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு உள்ள நிலை யில், சந்திரபாபு அரசாங்கம் மக் கள் பணிகளை விட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஒடுக்கும் வேலையை மட்டுமே முதன்மை பணியாக மேற்கொண்டு வருகி றது. இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (நெய் மூலமாக) கலக்கப்பட்டு இருப்ப தாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். உடனே நாட்டின் முக்கிய பிரச்சனை போன்று லட்டு பிரச்சனையை, தேசிய அளவிலான பிரச்சனையாக திசை திருப்பிய ஒன்றிய பாஜக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டும், நெய் வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் (தமிழ்நாடு - திண்டுக்கல்) மட்டும் சோதனையும் மேற்கொண்டது.
அறநிலையத்துறை அழிக்க சதி
இந்நிலையில்,”திருப்பதி லட்டு விவகாரத்தால் இந்து மதத்தின் புனிதம் கெட்டுவிட்டது. அதனால் திருப்பதி உள்ளிட்ட கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும்” என பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பு கள் கூப்பாடு போட்டு வருகின்றன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதி காரப்பூர்வ ஏடான ஆர்கனைஸர் இதழின் கட்டுரையில், “அரசாங் கங்களால் கோவில்கள் நிர்வகிக் கப்படுவது இந்திய அரசியல மைப்பு சட்டத்தை மீறுவதாக உள் ளன. கோவில்கள் அரசு கட்டுப்பாட் டில் இருப்பது பல நீதிமன்ற தீர்ப்பு களுக்கு எதிரான செயல் ஆகும். இதற்கு உதாரணமாக தமிழ்நாட் டின் கோவில்கள் உள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளர் பஜ்ரங் பக்தா, “ஆந்திர அரசு உடனடியாக திருப்பதி கோவில் நிர்வாகத்தை இந்துக்களி டம் ஒப்படைக்க வேண்டும். இது போல், நாட்டின் அனைத்து கோவில்களும், மடங்கள் மற்றும் புனிதத்தலங்களும் அரசின் நிர்வா கத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அரசால் அமர்த்தப்படும் இந்து அல்லாத நிர்வாகிகளால் இது போன்ற பிரச்சனை ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆந்திர அரசு, ஒன்றிய அரசிடம் கலந்துபேசி முடிவு எடுக்கும் என நம்புகிறோம்” என அவர் கூறினார்.
பாஜகவை புறந்தள்ளிய சந்திரபாபு
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி யை ஒடுக்க திருப்பதி லட்டு பிரச்ச னையை சந்திரபாபு தூண்டி விட்டார். மேலும் லட்டு பிரச்சனை யை தன்னுடைய அரசு மூலம் விசா ரணை மேற்கொண்டு ஜெகன் மோகனை சிறையில் அடைக்க சந்தி ரபாபு கணக்கு போட்டு இருந்தார். ஆனால் ஒன்றிய பாஜக அரசு இது தான் சமயம் என ஆந்திர அரசி டம் விளக்கம் கேட்காமலும், பேச்சு வார்த்தை எதுவும் நடத்தாமலும் லட்டு பிரச்சனையை தானாக கையிலெடுத்து தனியாக விசார ணையை தொடங்கியுள்ளது. மேலும் ஆந்திர அரசின் கட்டுப்பாட் டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை அர்ச்சர்கள் கையில் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு ஒன்றிய அரசு ஆதரவு அளிக் கும் என்றும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பு கள் கூறியது சந்திரபாபுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முந்திக்கொண்ட சந்திரபாபு,”விலங்குகளின் கொழுப்பு கலந்த லட்டு பிரச்சனை தொடர்பாக ஆந்திர அரசு விசா ரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கும். திருப்பதியில் பரிகார பூஜை நடத்துவோம்” என தேவஸ்தான அதிகாரிகள் ஆலோ சனையில் ஈடுபட்ட பின்பு கூறி னார். மேலும் லட்டு விவகாரத்தில் தனது கூட்டணி கட்சியான பாஜக கூறும் ஆலோசனைகளை சந்திர பாபு புறந்தள்ளி வருவதாகவும் தக வல் வெளியாகியுள்ளது.